பீட்டோ தன் மனைவியுடனும் ஒரே செல்ல மகளுடனும் லத்தீன் அமெரிக்க நாடான உருகுவே நாட்டில் உள்ள மெலோ என்ற சிறிய ஊரில் வசித்து வருபவன். மெலோ பிரேசில் நாட்டின் எல்லையை ஒட்டியுள்ளதால் சைக்கிளில் கூட சென்று வரலாம்.
விவசாய நாடான உருகுவேயில் வெளி நாட்டு பொருட்கள் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. போதிய படிப்பும் சொந்தமாக நிலமும் இல்லாத பீட்டோவிற்கு வெளிநாட்டு பொருட்களை சைக்கிள் மூலம் கடத்தி வருவதே வேலை. பெருமளவு பொருட்கள் பிரேசில் நாட்டிலிருந்து கடத்தி வரப்படுகிறது. தினசரி வியாபாரிகளுக்கு தேவையான பொருட்களை தினமும் 60 கி.மீ தூரத்திலிருந்து சைக்கிளில் கொண்டு வர வேண்டும். சாலை வழியாக வர இய்லாது. எல்லையோரத்தில் இராணுவ சோதனை முகாமும் சுங்கச்சாவடியும் உண்டு. வயல் வெளி மூலம் தான் ஊரை சுற்றி 60 கிலோ மீட்டர்களை ஒவ்வொரு முறையும் சைக்கிள் மிதித்து கடக்க வேண்டும். தினசரி குறைந்த பட்சம் இரண்டு மூன்று டிரிப் அடித்தால் தான் சாப்பாட்டுக்கே வழி. வறுமை வேறு.
பீட்டோவின் மகளான சில்வியாவிற்கு தன் தந்தையின் தொழில் அறவே பிடிக்கவில்லை. ஆனால் எப்போதும் தந்தையின் மீது கோவம் கொண்டு இருக்கிறாள். அவளுக்கு நன்கு படித்து நியூஸ் ரிப்போர்ட்டராக வர வேண்டும் என்பதே ஆசையும் கனவுமாக இருக்கிறது. சதா கையில் கிடைத்த பொருட்களை வைத்து கொண்டு மைக்கில் பேசுவது போல பேசி கொண்டே இருக்கிறார்கள். தன் வருமானத்தில் அவ்வளவு படிக்க வைக்க இயலாதென்று அடிக்கடி பீட்டோ கூறவே சில்வியாவிற்கு தந்தை மீது தீராக்கோபம்.
ஒரு நாள் திடீரென்று ஒரு மகிழ்ச்சியான செய்தி வருகிறது. அதாவது புனித போப்பாண்டவர் இவர்கள் ஊருக்கு வரப்போவதாக வானொலியிலும் தொலைகாட்சிகளும் செய்தி வரவே மக்கள் மகிழ்ந்து போகிறார்கள். ஊடகங்களுக்கு இந்த ஒரு செய்தி போதாதா..? தினம் தினம் 24 மணி நேரமும் இதை பெற்றி செய்தி குறிப்புகளும், நடக்கப்போவது என்ன..?? சிறப்பு பார்வைகள் என்று சகட்டு மேனிக்கு நிகழ்சிகளை நடத்துகின்றனர்.
அது தவிர போப்பின் வருகையால் முப்பது முதல் நாப்பதாயிரம் வரை பெருமளவு பக்தர்களும் மெலோ நகரக்கு வரப்போவதாக அறிவிக்கின்றனர். ஊர் மக்களின் சந்தோஷ மிகுதியால் இந்த சந்தர்பத்தை எப்படியாவது பயன் படுத்தி நாலு காசு பார்த்து விட வேண்டும் என்பதில் குறியாக உள்ளனர். ஒவ்வொரு வீட்டிலும் ஐடியாக்கள் குவிகின்றது.
வரப்போகும் ஆயிரமாயிரம் மக்களுக்கு என்னென்ன தேவை என்று பட்டியிலிட்டு அவரவர் ஆயுத்தமாகின்றனர். தேநீர் க்டை, பிஸ்கெட் தயாரிப்பு, பலூன் விற்பனை, பேட்ஜிகள், உருவப்படங்கள், நினைவு பொருட்கள், போப்பின் போஸ்டர்கள் என தயாரிப்பு வேலைகளில் ஈடுபட பீட்டோவிற்கு ஒரு யோசனையும் உதிக்கவில்லை.
பீட்டோவின் வீட்டில் சரியான கழிவறை வசதியில்லை. ஊரில் வசிக்கும் மக்களுக்கே சரியான வசதியில்லாத போது போப்பின் வருகையை ஒட்டி வரப்போகும் 30 ஆயிரம் பேருக்கு எப்படி வச்தி கிடைக்கும் என்று நினைக்கிறான். அதனால் ஒரு கழிவறை கட்டி அதன் மூலம் சம்பாதிக்கலாம் என்று திட்டம் போடுகிறான். இது தான் மிக்ப்பெரிய ஐடியாவாகவும் பண்ம் கொட்ட போகிறது என்று மனைவியிடமும் கூறுகிறான். முதலில் சந்தேகத்துடன் நடக்குமா..?? என்கிறாள். ஆனால் பீட்டோவின் பேச்சிலும் நம்பிக்கையிலும் மயங்கி அவளும் சம்மதிக்கிறாள்.
ஆனால் கழிவறை கட்ட காசு வேண்டுமே. இன்னும் பல டிரிப்களை அடிக்க ஒப்பு கொள்கிறான். ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் உழைத்து சிறிது பணமும் சேர்க்கிறான். இதற்கிடையே ஒரு நாள் சுங்கச்சாவடி சோதனையில் மாட்டி கொள்கிறான். சாவடியில் மொத்த பொருட்களையும் இழக்கிறான். தொடர்ந்து டிரிப் அடிப்பதால் இவன் மீது ஒரு கண் வைக்குமாறு உயர் அதிகாரி உத்தரவிடுகிறார். வெறுப்பிலும் விரக்தியிலும் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு மது அருந்தி கலாட்டா செய்கிறான். இதை அறிந்த வியாபாரிகள் அவனுக்கு டிரிப் தர விரும்பவில்லை.
ஒவ்வொரு வீட்டிலும் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க கழிவறையை கட்ட எப்படியாவது தொடங்க வேண்டும் என்று பீட்டோவிற்கு படபடப்பு அதிகமாகிறது. மற்றொரு சுங்கசாவடி அதிகாரி பீட்டோவிற்கு உதவ முயலுவதாகவும் ஆனால் அவருக்காக சில பொருட்களை கடத்தி வரவேண்டும் என்று யோசனை சொல்கிறான் நண்பன் ஒருவன். எப்படியாவது வேலை கிடைத்தால் சரி என்று சம்மதிக்கிறான் பீட்டோ. சிறிது முன் பணமும் கடனாக அளிக்கவே மகிழ்ச்சியுடன் கழிவறை கட்டட வேலைகள் ஆரம்பிக்கிறான். அக்கம் பக்கத்து வீட்டிலுள்ளவர்களும் பீட்டோவிற்கு கட்டட வேலையில் உதவுகின்றனர்.
நாளக்கு நாள் ஊடகங்கள் செய்திகளை அள்ளி கொட்டி கொண்டேயிருக்கின்றன. வீதி வீதியாக மக்களிடமும் வியாபாரிகளிடமும் என்ன பொருட்கள் விற்க போகிறார்கள் என்று கேட்டு பேட்டிகளை ஒளிப்ரப்ப மெலோ நகர மக்களின் மகிழ்ச்சிக்கு அள்வேயில்லை. வங்கியிலும் செல்வந்தர்களிடமும் அதிக வட்டிக்கு பணம் வாங்கி பொருட்களை மற்ற ஊர்களிலிருந்து வாங்கி குவிக்கின்றனர்.
போப்பின் வருகையின் நாள் நெருங்க நெருங்க ஊரே ஆரவாரமாயிருக்கிறது. பீட்டோவின் கழிவறை கட்டும் பணியும் வெகு வேகமாக நடக்கிறது. முக்கால் வாசி வேலை முடிந்து விட்ட நிலையில் கதவு மட்டுமே பொருத்த வேண்டும். ஆனால் கையில் காசில்லை. இன்னும் பல டிரிப்களை அடித்த வண்ணம் இருக்கிறான்.
சுங்கச்சாவடி அதிகாரியிடம் கடன் பெற்றதும் அவருக்காக கடத்தல் செய்வதும் மகள் சில்வியாவிற்கு தெரிந்து விடுகிறது. ஏற்கனவே தந்தையின் மீது இருக்கும் கோபம் அதிகரிக்க வீட்டில் வந்து தாயிடம் முறையிடுகிறார்கள். இனி பீட்டோவிடம் பேசுவதில்லை என்று இருவரும் அவனை புறக்கணிக்கின்றனர். உங்களுக்காக இத்தனை கஷ்டங்களையும் படுவதாக நொந்து கொள்கிறான் பீட்டோ. தன் குடும்ப நிலையையும் வறுமையும் தன் அருமை மகளின் நிராகரிப்பும் பீட்டோவிற்கு அதிக மன வேதனையளிக்கிறது. கழிவறை கட்ட அவனிடம் கடன் வாங்கியிருக்கிறேன். அதன் அடைத்தவுடன் அவனிடம் போக மாட்டேன் என்கிறான் பீட்டோ.
அதை எப்படி அடைப்பது என்று வேதனையுடன் கேட்கவே மகளின் கல்லூரி படிப்புக்காக தான் நெடுநாளாக சேமித்து வைத்திருந்த மொத்த பணத்தையும் கொண்டு வந்து கொடுக்கிறாள் மனைவி. அதில் சிறிது பணத்தை கடனுக்காக அடைத்து விட்டு மீத் பணத்தில் கழிவறைக்கு கதவு வாங்குகிறான். போப்பின் வருகையால் இன்னும் கூட்டம் அதிகரிக்க கூடும் என்றும் பக்தர்களின் வருகை ஐம்பதாயிரத்தை கூட தாண்டலாம் என்று ஊடகங்கள் ஆருடம் சொல்கின்றன.
கழிவறை உபயோகிக்க வரும் கூட்டத்தை எப்படி வரவேற்பது, அவர்களிடம் எப்படி பேசுவது, பணத்தை வசூல் செய்வது என்று மனைவிக்கும் மகளுக்கும் வகுப்புகள் எடுத்து ஒத்திகை பார்க்கிறான் பீட்டோ. இன்னும் சில டிரிப்புகள் மட்டுமே அடித்து விட்டால் நல்ல தொகை கிடைத்து விடும் ஆனால் தொடர்ந்து சைக்கிள் ஒட்டுவதால் பீட்டோவின் முழங்கால் பாதிக்க ப்டுகிறது. வலியும் அதிகரிக்கிறது. பெரிய துணி ஒன்றை கட்டி கொண்டு சில டிரிப்களை முடிக்க ஆயத்தமாகிறான்.
நாளை போப் வரும் நாள் என்று அறிவிப்பு வந்தாயிற்று. கழிவறைக்கு வேண்டிய பீங்கானை இன்னும் பொருத்தவில்லை. அதை வாங்க சைக்கிளில் பறக்கிறான். கையில் இருந்த காசையெல்லாம் செலுத்தி வாங்கியும் விடுகிறான். சைக்கிளில் கட்டி கொண்டு வழியில் திரும்பும் போது சுங்க அதிகாரி தம்மிடம் பெற்ற கடனை திருப்பி செலுத்த நிர்பந்திக்கிறார். இனி அவருக்கு வேலை செய்ய போவதில்லை என்று அறிந்ததும் ஆத்திரம் கொண்டு பீட்டோவை கடுமையான தாக்குவதுடன் சைக்கிளையும் அபகரித்து செல்கிறார்.
போப் வந்தாயிற்று என்று தொலைகாட்சிகளில் நேரடி ஒளிப்பரப்பும் தொடங்கியாயிற்று. செய்வதறியாது பீட்டோ கழிவறை பீங்கானுடன் வீடு நோக்கி ஒடுகிறான். இதை டிவியில் பார்த்த மகள் சில்வியாவின் கண் கலங்குகிறாள்.ஆனால் ஊருக்குள் வந்ததும் கூட்டமே காணவில்லை. மிக குறைந்த அளவே பக்தர்கள் வந்துள்ளனர். ஊடகங்கள் மட்டுமே நிரம்பி வழிகின்றன. வந்த பக்தர்களும் கூட போப்பின் பேச்சை மட்டும் கேட்டு விட்டு கிளம்ப தயாராகின்றனர்.
ஊர் மக்கள் அனைவரும் நொடித்து போகின்றனர். வந்த விலைக்கு தின் பண்டங்களை கூவி கூவி விற்க தொடங்குகின்றனர். பாதி கூட விற்பனையாகவில்லை. அனைத்து பொருட்களும் வீணாகின்றன. பீட்டோவின் கழிவறையை எட்டி பார்க்க கூட எவருமில்லை.
போப்பும் கிளம்பி போய் விடுகிறார். அனைத்து தின் பண்டங்களும் நாய்களுக்கும் பன்றிகளுக்கும் உணவாகிறது. மிச்சமிருந்த தின் பண்டங்களை தின்ன கூட அந்த சிறிய ஊரில் மிருகங்கள் இல்லை. ஊரே கடனாளியாகி சொல்ல முடியாத வேதனையில் துடிக்க அவர்க்ள் வாழ்வே போப்பின் வருகையால் வீழ்ந்து போனதாக நினைக்கின்றனர்.
ஊடகங்களின் அதீத கற்பனையும் விளம்பரமும் ஒரு ஊரின் வாழ்வாதாரத்தையே சூறையாடி விட்டது. பொறுப்பு வாய்ந்த ஊடகங்களின் பொறுப்பற்ற விளம்பர மோகத்தால் தமது வாழ்நாள் முழுவதும் உழைத்து வட்டி கட்ட வேண்டிய நிலைமைக்கு ஆளாகின்றனர். இதற்கு யார் பொறுப்பாக முடியும் என்ற கேள்வியோடு திரைப்படம் முடிகிறது.
இருவரில் Cesar மிகச்சிறந்த ஒளிபபதிவாளர். ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டவர். ஒளிப்பதிவில் பல சர்வதேச விருதுகளை பெற்றவர் என்று திரைப்படம் பார்ப்பவர்களுக்கு சொல்ல தேவையில்லை. அத்தனை ரம்மிய்மான ஒளிப்பதிவுகள். பல காட்சிகள் இயற்கை ஒளியிலேயே படமாக்கப்பட்டுள்ளன. மலைகளும், ஓடைகளும் இயற்கை காட்சிகளை தன் காமிராவால் கண் முன்னே நிறுத்துகிறார். பீட்டோ ஒவ்வொரு முறையும் சைக்கிளில் செல்லும் போது அமைக்கப்பட்ட காட்சியமைப்புகளை விவரிக்க வார்த்தைகளில்லை.
திரைப்ப்டத்த்தில் நடிப்பும் பாத்திரங்களின் படைப்பும் அனைத்தும் யதார்த்தமாக சொல்வதுடன் தமது நோக்களிலிருந்து மாறாமல் திரைக்கதையை அமைத்துள்ளார்கள் ஆசிரியர்கள். ஒவ்வொரு பாத்திர படைப்பும் தமது மன்சாட்சியை பிரதிபலிப்பதாயும் பீட்டோவும் மகளின் பாத்திர படைப்புகள் மூலம் வெளியாகிறது. குறைந்த வசனங்களுடன் கவித்துவமான காட்சிகளை கொண்ட லத்தீன் அமெரிக்க திரைப்படங்களுக்கு இந்த திரைப்படம் ஒரு மிகச்சிறந்த உதாரணம்.
மகள் தன் மீது கோவம் கொண்டாலும் மகளின் மீதான அன்பும் மனைவியின் மீதான காதலும் பீட்டோவிற்கு இம்மியளவும் குறையாது மகளின் விருப்பபடி கடைசியில் அவன் இனி வேறு வேலை பார்ப்பதாக கூறும் காட்சி நெகிழ்வை தருகிறது.
பிரேசில்,மெக்ஸிகோ,கேன்ஸ் என்று பத்திற்கும் உலக பட விழாக்களில் பங்கு பெற்று பரிசை தட்டி சென்றுள்ளது என்றாலும் சர்ச்சைக்குரிய பெயர் என்று குறிப்ப்டபட்டு ஆஸ்கார் பட்டியலில் இடம் பெறாமல் போனது வருத்தமான செய்தியுமாகும்.
சந்தர்ப்பம் கிடைத்தால் கண்டிப்பாக பாருங்கள்.
உடனே பார்க்க டிரைலர் இங்கே
61 comments:
TEST..
//பொறுப்பு வாய்ந்த ஊடகங்களின் பொறுப்பற்ற விளம்பர மோகத்தால் தமது வாழ்நாள் முழுவதும் உழைத்து வட்டி கட்ட வேண்டிய நிலைமைக்கு//
This is True SURYA..
thanks for sharing
ஆஹா அருமை நண்பரே !
ஒவ்வொரு புகைப்படங்களும் ஒரு புது கதை சொல்லும் அளவிற்கு சிறப்பாக அமைத்து இருக்கீங்க . படம் நேரில் பார்க்கும் உணர்வா உங்களின் ஒவ்வொரு விமர்சனமும் தருகிறது .
ஓட்டு போடுவதற்கு முயற்சித்தேன் ஆனால் உங்கள் பதிவு இன்னும் இணைக்கப்படாத நிலையில் இருப்பதால் இயலவில்லை .
படித்தேன்,ரசித்தேன்
//பொறுப்பு வாய்ந்த ஊடகங்களின் பொறுப்பற்ற விளம்பர மோகத்தால் தமது வாழ்நாள் முழுவதும் உழைத்து வட்டி கட்ட வேண்டிய நிலைமைக்கு//
..........வேதனையான விஷயம். இந்த கதையின் கருத்துக்காகவே, எல்லோரையும் பாராட்ட வேண்டும். உங்கள் விமர்சனம் - சொல்லிய விதம் - அருமை.
அருமை. கண்டிப்பாக பார்க்க முயற்சி செய்கிறேன்
இது அந்த பாமா விஜயம் ரக கதையா இருக்குல்ல?
எவ்வளவு உண்மை . .ஊடகங்கள் பல ஆரூடங்கள் சொல்லி, மக்களின் ஆசையைத் தூண்டிவிட்டு, பின் அதற்கு நேர்மாறாக நடக்கும்போதும், அதற்கும் ஒரு சால்ஜாப்பு சொல்லி, தங்கள் வேலையைக் கவனிக்கச் சென்றுவிடும். . பாதிக்கப்படுவது மக்களாகிய நாம் தான் . . இப்படத்தின் கதை, நெஞ்சைத் தொடும் வகையில் உள்ளது . .அவசியம் பார்ப்பேன் . . மிக்க நன்றி சூர்யா . . இப்படத்தை அறிமுகப்படுத்தியமைக்கு . .
அண்ணா படிக்கும்போதே பார்க்கனும்போல இருக்கு, பார்த்துவிடுகிறேன். நன்றி அறிமுகத்திற்கு
அருமையான விமர்சனம், ஆனால் இப்படிப்பட்ட பெரும் சோகப் படத்தை எப்படிப் பார்பது என்று தான் தெரியவில்லை
நன்றி தேனம்மை.
நன்றி வாசகன்.
நன்றி ஜெரி. சென்ற வாரம் கலக்கி விட்டீர்கள். வாழ்த்துகள்.
நன்றி சித்ரா.
தொடர்ந்து வரும் உங்கள் ஊக்கத்திற்கு நன்றி.
ரைட்டு ஜி..:)
நன்றி சின்ன அம்மணி.
நன்றி பப்பு. Theme அப்படி இருக்கலாம் பப்பு. ஆனால் கதை களம் வேறு.
நன்றி ராஜேஷ்.
ஹாலிவுட் பாலாவை கேட்டதாக சொல்லுங்க..
நன்றி முரளி. உனக்கு நிச்சயம் இந்த படம் பிடிக்கும். சென்னை விஜயம் எப்போது..??
நன்றி கோவி கண்ணன். சோகம் என்பதை விட நெகிழ்ச்சியான தருணங்கள் அதிகம். காட்சியமைப்புகள் அருமை. பார்க்கலாம்.
அருமையான பகிர்வு. உணர்வுகளின் அடிப்படையில் அமைந்த நெகிழ்ச்சியான படம். நிச்சயம் பார்க்க வேண்டும்.
பகிர்விற்கு நன்றி.வாழ்த்துக்கள்.
அருமையான விமர்சனம், ஆனால் இப்படிப்பட்ட பெரும் சோகப் படத்தை எப்படிப் பார்பது என்று தான் தெரியவில்லை
மனதை கசக்குகிறது எவ்வளவு எதிர்பார்ப்பு தான் அந்த மக்களிடம் தான்
நல்லா எழுதறே சூர்யா.. கொஞ்சம் புனைவுகளும் டிரை பண்ணூங்க!!
நன்றி துபாய் ராஜா.
நன்றி மோனி புவன் அம்மா.
நன்றி மணிஜி. உங்களிடம் ஒரு மாதம் டியுஷன் எடுத்துட்டு ட்ரை பண்ணவா..??
superb Surya! i enjoyed reading the review and ur words made me feel the movie live!
Thanx Sri.
நல்ல அறிமுகம் சூர்யா. முடிந்தால் படத்தின் டிவிடியை இரவலாக கொடுங்கள் :)
தோழமையுடன்
பைத்தியக்காரன்
நல்ல அறிமுகம் சூர்யா. முடிந்தால் படத்தின் டிவிடியை இரவலாக கொடுங்கள் :)
Enakum...
already you give 20 movies list personally, now you give some more list. Oh god when i will see this all film..!!!
கிராமத்து மக்கள் எப்பவுமே..உஷாராதானே இருப்பாங்க..... நம்ம ஊர் மீடியாவை ஒப்பிட்டு பார்த்தா ஒரே சிர்ப்பு சிர்ப்பா வருதுங்க. நல்லதோர் பார்வை சூர்யா :)
Nice.. thala.... Neradiyaaga padam parthadhu polave irundhadhu
//பொறுப்பு வாய்ந்த ஊடகங்களின் பொறுப்பற்ற விளம்பர மோகத்தால் தமது வாழ்நாள் முழுவதும் உழைத்து வட்டி கட்ட வேண்டிய நிலைமைக்கு//
சாட்டையடி. அருமையான பதிவு.
very nice..
nalla pakirvu..
thanks
நன்றி சிவராமன்ஜி. நீங்க கேட்டு இல்லாமலா..?
ராஜகோபால், You are in Q ..
ஷர்புதீன். முதல் லிஸ்டை முடிங்க.. நிறைய இருக்கு இன்னும்.
நன்றி டாக்டர் அசோக்.
குப்பைக்கு போக வேண்டிய படங்களை இன்று ஊடகங்கள் ஊதி ஊதி ஒட வைப்பதை தானே சொல்கிறீர்கள்..??
நன்றி சுகுமார்.
நன்றி வேல்கண்ணன்.
நன்றி ராஜி.
பகிர்விற்கு நன்றி அண்ணா.
மிக உருக்கமான சினிமா அதை சொல்லிய விதம் அருமை.
மிக உருக்கமான சினிமா அதை சொல்லிய விதம் அருமை.
நன்றி ராமசாமி.
நன்றி ஜோ ஜோ
படங்களை பார்த்து சிரிப்பு படம்ன்னு நினைச்சேன். உங்களைடய விமர்சனம் அதை சிறப்பு படமென்று உணர்த்தியிருக்கு.
அவசியம் பார்க்கனும்.
நன்றி ஜமால்.
சூப்பர் கதையா இருக்கே..!
டிவிடி கொடுங்கண்ணே..
நல்லா இருக்கு அருமையான தொகுப்பு
நன்றி உ.த.
டிவிடி சர்குலேஷன்ல போயிருக்கு. வரட்டும் தரேன்.
நன்றி கவிதா.
மூன்று நாட்களுக்கு முன்பே கமெண்ட் எழுத நினைத்து மறந்து போனது. காரணம் பொறுப்பற்ற ஊடகங்கள்தான். தெலுங்கானா பிரச்சனையில் தீக்குளித்த இளைஞனை திரும்பத் திரும்ப சினிமா போல காட்டி, என்னை கடும் கோபத்திற்கு உள்ளாக்கிவிட்டார்கள்.
நன்றி செல்வா. உலகம் முழுவதும் ஊடகங்கள் ஒரே மாதிரிதான் இருக்கு போல.
அருமை!
அருமையான பகிர்வு.நன்றி.
//ஊடகங்களின் பொறுப்பற்ற விளம்பர மோகத்தால்//
அருமையா சொல்லிருக்கீங்க..நல்ல பகிர்வு..
அற்புதமாக அப்பிடியே எழுதி இருக்கிறீர்கள். நான் இந்தப் பதிவ எப்படி மிஸ் பண்ணேன்னு தெரியலை.வர வர ஞாபக மறதி அதிகமாயிருச்சு...
நித்தியோட பகவத் கீதைப் படிக்கோனும்.
அழுத்தமான கதை. நல்ல விமர்சனம்.
////////// வாசகனாய் ஒரு கவிஞன் சங்கர் !!! said...
ஆஹா அருமை நண்பரே !
ஒவ்வொரு புகைப்படங்களும் ஒரு புது கதை சொல்லும் அளவிற்கு சிறப்பாக அமைத்து இருக்கீங்க . படம் நேரில் பார்க்கும் உணர்வா உங்களின் ஒவ்வொரு விமர்சனமும் தருகிறது .
ஓட்டு போடுவதற்கு முயற்சித்தேன் ஆனால் உங்கள் பதிவு இன்னும் இணைக்கப்படாத நிலையில் இருப்பதால் இயலவில்லை . ///////////
என்ன அப்படி பார்க்குறீங்க ? புதியதாக பதிவு எதுவும் போட்டு இருக்கீங்களானு பார்க்கவந்தேன் .
மீண்டும் வருவான் பனித்துளி !
Arumai Surya... my heart went out to the family especially the man..and totally to the whole village...awesome movie...plot.. truly awesome...pics were great and the trailer completed the picture...felt like i almost saw the movie...such is your presentation...i am totally AWED at you and your thiran !!
Cheers!!
Priya
Post a Comment